JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஏப்ரல் 07, 2016

இன்று வியாழன். இன்று சாயீ


இன்று வியாழன். இன்று சாயீ

மேடம்  உமையாள் காயத்ரி எழுதிய கவிதை. 
மிருதுவாய் என்னும் தலைப்பில். 
இன்று அவர் வலைத்தளத்தில் இடப்பட்டு இருக்கிறது. 
அந்த தளத்திற்குச் செல்ல இங்கே கிளிக்கவும் 



சன்னதியில் சாந்தம் கண்டேன்
சாய்ந்திட தோளும் கொண்டேன்
எண்ணிட நீயும் வந்தாய் கண்டேன்
ஏந்தினாய் உன்னிரு கைகள் கொண்டே

வாய்க்கப் பெற்றேன் உன்னைக் குருவாய்
வாய்ப் பளித்தாய் எனக்கு நற்கதியை
பாட நினைக்கையில் பாட்டாய் வந்தாய்
எழுத நினைக்கையில் கவிதையாய் பூத்தாய்

அலைய அலைய கடிவாளம்  போட்டாய்
அகத்தினில் நாளும் மாற்ற மிட்டாய்
மிருதுவாய் நீயும் புகுந்து ரைத்தாய்
மீண்டும் மீண்டும் உந்தாளடி கிடப்பேன் ஐயா.