JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஜனவரி 09, 2014

ஒருத்தி மகனாய்ப் பிறந்து...

வாசலிலே பெருமாள் வரார்.
வரவா என்று ஒரு ஓசை.
என்ன என்று உன்னிப்பா கேட்டேன்.
ரவா தோசை செய்ய வந்திருப்பவர்
வ ரவா என்று கேட்டு இருக்கிறார்.

#####################################################################


பாசுரம் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து...

என்று துவங்கும் பதிகத்தை தனது வலையில் எனது நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் அழகுறப் பதித்து இருப்பதை யாம் காண முடிகிறது.

அதை நீங்கள் கீழே காண்கிறீர்கள். சைவமும் வைணவமும் ஒருங்கே இணைந்து வலையத்தில் வளைய வரும் வலைப்பதிவு இதுவே. இங்கே சென்று வாருங்கள். 
சிலருக்கு வானத்தில் ஒன்றல்ல, இரு கதிவரன்கள் காட்சி அளித்துள்ளனர். வானிலே இரண்டு ஆதித்யர்கள் பிரகாசமாகி இருப்பது, எனக்கு த்வைதமும் அத்வைதமும் காட்சி அளித்ததோ என்று நினைத்தேன்.
இரண்டு அல்ல, ஒன்று தான்.
ஒன்று உண்மை. அடுத்தது பிரமை.
அவன் இருக்கிறான் என்பது உள்ளே பகலவன் காட்டிய பிரகாசம்.

அவன் அருளாலே அவன் தாள் போற்றி.எனச்சொல்லுவது தேவாரம்.

மேற்கொண்டு திருப்பாவை பார்ப்போம்.





வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் என்ன சொல்கிறார் என்று கவனித்து பார்க்கவேண்டும்.



கவிஞ்ர் கண்ணதாசன் தரும் உரை உள்ளங்கை நெல்லிக்கனி போல் இருக்கிறது.

ஒரு மாறுதலுக்கு மூவாயிரப்படி வியாக்கியானம் செய்த பரமகாருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை அருளிச்செய்த புத்தகத்தில் இருந்து படிப்போமா என்று நினைத்தேன்.

அந்த உரைக்கு  ஒரு வியாக்யானம் சொல்ல எனது விசிஷ்டாத்வைத நண்பர் திரு சக்ரபாணி அய்யங்கார் அவர்களால் தான் இயலும். அவரோ  அட்லாண்டாவில் இருக்கிறார்.
+chakrapany sourirajan
அவர் பாவம் மைனஸ் ஆறு டிகிரி குளிரில் தவிக்கிறார்.
நான் இந்த உரைக்கு சரியான பொருள்  புரியவில்லையே என்று தவிக்கிறேன். அவர் வந்து சொல்வார். அதை அடுத்த வருஷம் தருகிறேன்./
பெருமாள் அனுக்ரஹம் செய்தால்.


அதை இன்னும் நான் சற்று படித்து வெளியிடுகிறேன்.
ஆண்டாள் கல்யாணம் ஒரு அற்புத நிகழ்ச்சி இன்னிக்கு.

மிகவும் நல்லா இருக்கு.

கடைசி வரைக்கும் பார்த்துட்டு பிறகு
ப்ரேக் பாஸ்ட் சாப்பிட செல்லவும்.







இன்னிக்கு இன்ஸ்டன்ட் தோசா.
நெய் ரோஸ்ட்  .மாவு தோசை ரோஸ்ட்.
+Geetha Sambasivam
கீதா  சாம்பசிவம் வலைலே தோசை வேனுமா அப்படின்னு கேட்டு .இருக்காங்க. அங்கென போனா எப்படி பண்றது அப்படின்னு  மட்டும் தான் சொல்லி  இருக்கிறது.அப்ப இங்கே கோதுமை தோசை கிடைக்காதா ...என்று
சுப்பு தாத்தா கேட்டார்.

இது ஒன்னும் ஹோட்டல் இல்ல. இது கேடரிங் ஸ்கூல். இங்கே கற்று கொடுப்போம். எப்படி தோசை பண்றது ? அதை தெரிஞ்சுண்டு நீங்க உங்க வீட்டிலே போய் செய்து  சாப்பிடனும். அப்படின்னு சொல்றாக.

இது நமக்கு சரிப்பட்டு வராது அப்படின்னு ச்ருதிஸ் கிச்சன் போனோம்.
அங்கே வாங்கோ வாங்கோ அப்படின்னு  கூப்பிட்டு,உங்களுக்கு 100, 1000 வேணுமா
நாங்களே அங்கு பஜனை பண்ற ஹாலுக்கு வந்து தோசை பண்ணி ஹாட் ஆ சர்வ் செய்யறோம் என்று சொல்ல உடனே ஆர்டர் பண்ணிட்டு வந்தேன்.

நெய் ரவா ரோஸ்ட் வேணும் அப்படின்னு பிரியப்படுபவர்கள் அடுத்த ஹாலுக்கு செல்லவும். அங்கே இன்ஸ்டன்ட் ரவா தோசை கிடைக்கும்.
+Dindigul Dhanabalan +Balu Sriram





*******************************************************************************************************************************************************************************************************************************************

இந்த மாதம் 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி.
அன்றைய சிறப்பினை நாம் ராஜேஸ்வரி அவர்கள் வலையிலே அன்றோ அதற்கு முதல் நாளோ பார்க்கலாம்.

கோவிந்தன் அந்த ஸ்ரீநிவாசன், பரந்தாமன்,ரங்கன், கண்ணன், வாசுதேவன்
என்று நாம் பல விதமாக வர்ணிக்கும்
மாதவன் செய்த மிராகிள்
எனது இன்னொரு வலையில் வெளியாகிறது.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++