JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், ஜனவரி 07, 2014

த்வாபர யுகத்திலே நெய் ஊத்தப்பம்

சொர்கத்திலிருந்து பூ மாரி சொரிந்தார் போல்.....!!!!

இன்னிக்கு திருப்பாவை 23 வது பாசுரம்.  அதை சிறப்பிக்க இன்னும் ஒரு நிகழ்வும். 

வலைச்சரத்தில் ஆதி வெங்கட் அவர்கள் இன்று ஆசிரியர் பதவி ஏற்பதை முன்னிட்டு அவர்கள் வலையிலிருந்து ஒரு திருக்கோலம். 
+Adhi Venkat 
நன்றி.ஆதி வெங்கட். அவர்கள்.


எதுக்கும் இருக்கட்டும் அப்படின்னு  கோவில் லே ஒரு படம் புடிச்சுண்டு வந்தேன். அத அப்படியே நம்மாத்து வாசல் லே போடணும். 

இன்றைக்கு பாசுரத்திலே 23 என்று ஹிந்து தினசரி கொடுப்பதும் 23 ஆக திருப்பாவை புத்தகத்தில் இருப்பதும் மாறி இருக்கிறது. இல்லை. எனக்குத் தான் பிரமையோ.

கண்ணன் இப்போது தான் கண்களைத் திறக்கின்ற காட்சி.

ஜஸ்ட் ஒரு மாறுதல் பொருட்டு, இன்று நித்ய ஸ்ரீ அவர்கள் பாடுகின்ற ஒன்றல்ல நான்கு பாசுரங்களை இன்று தருவோம்.

TODAY
first you are listening to NITHYASHREE MAHADEVAN

அந்த பூக்கோலத்தை இன்னிக்கு ஹால் லே போடுங்கோ.
என்ன விசேஷம் !!
போக போகத் தெரியும்.

இன்று சிங்கப்பெருமாள்  கோவிலே வீற்றிருக்கும் சிங்கம் தன் கண்களை விழிப்பது போல் ஒரு உணர்வு.
ஆகவே, இன்று ஒரு வித்தியாசமாக, இன்னொரு உரை தனை முதலில் யாம் படிப்போம்.
+revathi narasimhan


நாச்சியாரின் கருணை மிகு குரலைக் கேட்ட கண்ணன் எங்கள் பரமன் பரந்தாமன், வாசுதேவன், பிருந்தாவன சாரங்கன், மணி வண்ணன், தனது மலர்ப் படுக்கையில் இருந்து,
உடல் சிலிர்த்துக்கொண்டு, ஒரு முறை கர்ஜித்து, பின் ராஜ நடை போட்டு சிங்கம் போல் வருகிறான்.

வந்து அந்த சிம்மாசனத்திலே உட்காரப்போகிறான் .

அந்த சிம்மாசனம் இந்த வலை நண்பர் திருமதி ஆதி வெங்கட் வைப் ஆப் வேங்கட நாகராஜ் அவர்கள் போட்ட பூக்கோலத்தில் மேலே இருக்கிறது.

ஓ !! அப்படியா சமாசாரம் !!

சிம்மாசனத்திலே உட்கார்ந்து கொண்டு எங்களைப் பார். எங்களுக்கு அருள் செய் என்று கோதை பிரார்த்திக்கிராளாம்.

வேளுக்குடி உபன்யாசம் நாளைக்கு  வரும்.



கண்ணதாசன் இந்த பாட்டுக்கு எழுதிய உரை இப்போ.
இன்னும் கொஞ்ச நேரத்தில் கூகிள் வெளியீடு ஆகும்.
அதற்கு முன்னே எனது வலை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள் வலைப்படம் அவருக்கு எமது நன்றி.




ரொம்ப டயர்டா ஆயிடுத்து. சூரி சார்.

பொறுமை . பொறுமை.

இன்னிக்கு மாஹிஸ் கிச்சன் லேந்து ஸ்பெசலா நெய் ஊத்தப்பம் இங்கேயே சுடச்சுட போட்டு தருவதற்கு ஏற்பாடு ஆகியிருக்கு


.ஏன் சூரி சார், அந்த த்வாபர யுகத்திலே நெய் ஊத்தப்பம் எல்லாம் இருந்திருக்காதோ ?
+Venkatasubramanian Ramamurthy
+Balu Sriram
என்ன திடீர் அப்படின்னு ஒரு சந்தேஹம்.?

இந்த கோதை இப்படி மாத்தி மாத்தி அப்பீல் பண்றா. பகவான் கண்ணை துறந்து பார்க்கலையே... நானா இருந்தா..

நீரா இருந்தா என்ன செஞ்சு இருப்பீர்.

ஒரு பத்து நெய் ஊத்தாப்பத்தை அவர் முன்னாடி வச்சு .
நீ கண்ணைத் தொற . இல்லாட்டி, அத்தனையும் காணாம போயிடும் அப்படின்னு சொல்வேன்.


கண்ணன் பக்தாளுக்கு அடிமை இல்லையோ..

சரி. சரி.

நெய் ஊத்தப்பம் ஜோர். ஸ்பெசல் நெய்யோ !



இட்லி மிளகாய் பொடி 2 ஸ்பூன் கூட போடுங்கோ. இதயம் நல்ல எண்ணை தாராளமா சாதிங்கோ..

ஆஹா.எத்தனை ஒருவருக்கு அப்படின்னு இருக்கா ?

மேக்சிமம் 10 வரைக்கும் சாப்பிடலாம். ப்ரீ. ஆனா, 11 சாப்பிட்டா, மொத்தம் 11 க்கும் ரூபாய் 45 வீதம் பில் கட்டனும்.

அது என்ன கஜ்ரிவால் டெல்லி லே கணக்கு போட்டு தண்ணி விடரா மாதிரி இருக்கு.
http://mahikitchen.blogspot.in/2013/12/blog-post_24.html
தோ பாருங்கோ !!
என்ன ?
ஊத்தப்பம் ரொம்ப நன்னா இருக்காம்.
ஆமாம். அதுக்கென்ன ?
உங்க ப்ரெண்ட் விஜயராகவன் அவர் ஆத்துக்காரிக்கு ஒரு அஞ்சு பார்சல் எடுத்துண்டு போலாமா அப்படின்னு கேட்கறார்.
+Anandaraja Vijayaraghavan
+Ranjani Narayanan
+ilayanila ilamathy
+Madhan Nagasubramaniam
அஞ்சு என்ன பத்து எடுத்துக்கட்டும். ஆவி பறக்க  ஹாட் பாக் லே வச்சு அனுப்பு.



இது என்ன இந்த சின்ன பொண்ணுங்கல்லாம் குதிச்சுண்டு வர்றது ? என்ன விசேஷம் ?

கோதை ஆண்டாள் திருமண வைபவம். குழந்தைகள் டான்ஸ் ப்ரோக்ராம்.

வந்தவர்கள் எல்லாம் ப்ரேக் பாஸ்ட் சாப்பிட்டுகிண்டே இந்த டான்ஸ் ப்ரோக்ராம் பார்க்கலாம்.



***********************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************************
இன்றைய பொன்மொழி.

Even if it seems to be lost, think that it is not gone away but is there and just hidden.

 +Sri Sri Ravi Shankar