JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

ஞாயிறு, ஜனவரி 05, 2014

நாங்கள் பூரியை நினைச்சு வரோம். நீங்களோ பூரி ஜெகன்னாதனை நோக்கி போகச் சொல்றீக

என்னங்க..

என்ன என்னங்க.

நம்ம வீட்டிலே 

என்ன நம்ம வீட்டுலே 

அட ..என்னக திருப்பி திருப்பி சொல்லிக்கிட்டு ..
வாசலை பாருங்க. என்ன இம்புட்டு மாடு.
 இம்புட்டு பேரு பால் கறந்துட்டு இருக்கராக..
என்ன விசேஷம்..



அடியே.. 
நம்ம தான் வீட்டை மாத்திகிட்டு வந்துட்டோம்டி. 
sangu chakra kolam 

ஆமாண்டி, அந்த யாதவ குல கோகுலத்துக்கே வந்துட்டோம் டி. 

அப்ப இனிமே ஆவின் பால் வேண்டாம் 
அப்படின்னு நம்ம பால் வெங்கடேசனுக்கு செல் அடிச்சட்டுமா..

கொஞ்சம் பொறுடி. இது எப்பவும் நீடிக்குமா அப்படின்னு தெரியல்லையே 
இரண்டு நிமிஷம் கழிச்சு ஜரகண்டி, ஜரகண்டி அப்படின்னு சொல்லிடுவாக இல்ல. 

அப்படியா..அப்ப கனவு முடிஞ்ச உடனே காட்சியும் மாறுமோ. 

திருப்பாவை பாசுரம் 21

ஏற்ற கலன்கள்  எதிர்பொங்கி மீதளிப்ப 
மாற்றாதே பால் சொரியும் வள்ளற்ப் பெரும்பசுக்கள் 
ஆற்றப்படைத்தான் மகனே அறிவுறாய்
  ஏற்றமுடையாய் உலகினில் 
தோற்றமாய் நின்ற சுடரே துயிலெழாய் 
மாற்றார் உனக்கு வலி தொலைந்துன் வாசற்க்கண் 
ஆற்றாது வந்துன் அடிபணியுமாப்போலே 
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்  


விளக்கம் 

பாத்திரங்களில் பொங்கி வழியும்படி இடைவிடாமல் பால் சொரியும் 
பசுக்களுக்கு சொந்தக்காரனான நந்தகோபனின் மைந்தனே 
கண்ணனே எழுவாயாக 
அடியாரைக் காப்பதில் அக்கறை கொண்டவனே 
வேதங்களாலும் அறியமுடியாதபெரியவனே 
இவ்வுலகில் அவதரித்த ஒளி  பொருந்திய முகம் கொண்ட
நாராயணனே துயிலெழாய் உன்னை வெல்ல முடியாத பகைவர்கள் உன் காலில் விழுந்து உயிர் பிச்சை கேட்க வந்துள்ளதுபோல் நாங்களும் உன் புகழ் பாடிக்கொண்டு உன்னை அடைய வந்துள்ளோம்.  
விளக்கம் தந்த திரு.பட்டாபிராமன் அவர்கள் வலைக்குச் செல்ல இங்கே கில்லிடவும் 


எம்.எல். வி. அம்மா 21வதுபாசுரம் பாடுகின்ற அதே வேளையில் பெருமாளை சேவியுங்கள்.


ஒரு பக்கம் பசும்பால் குடம் குடமா கொட்டுது.
இன்னொரு பக்கம் சிசுக்கள் அதுக்காக ஏங்கி நிற்கும் காட்சி.

கண்ணதாசன் என்ன சொல்றாரு. கேட்போமா. !

இதை சுப்பு தாத்தா பாடி இருக்காரு தன்யாசி ராகத்துலே.
பாடுறாரா படிக்கிறாரா நீங்களே கேளுங்க.
கொஞ்ச நேரத்துலே
கூகிள்லே 


இன்னிக்கு ஒரு ஸ்பெசல் நிவேதனம்.

வட  இந்தியாவிலே இருந்து ஒரு பஜனை கோஷ்டி வந்திருக்கு.
அவங்க இப்ப ராதா கிருஷ்ண பஜனை பண்ண போராங்க.

பஜனை முடிஞ்சப்பறம் , அவங்க சம்ப்ரதாயத்து படி உணவு அளிக்கப்படும்.


அமைதியா கேட்கணும்.



ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ண கிருஷ்ணா ஹரே ராம
ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே கிருஷ்ணா.
+Balu Sriram
எல்லோரும் ஒரு அஞ்சு நிமிஷம் சேர்ந்து  பாடணும்.

பாடி முடிச்சாச்சு.

அவசரப்படக்கூடாது. ரொம்ப அவசரம் அப்படின்னா
இந்த மெனு லிஸ்டை பார்த்துகினே இருங்க.
+Balu Sriram
ஏன் பார்த்தா பசி தீருமா.?

பகவானை பார்த்தாலே ஏன் நினைச்சாலே பசி வராது.

 சுவாமி,நாங்கள் பூரியை நினைச்சு வரோம். நீங்களோ பூரி ஜெகன்னாதனை நோக்கி போகச் சொல்றீக..   இன்னிக்கு மட்டும் கொஞ்சம் ஒப்ளைஜ் பண்ணுங்க.  பசி கண்ணை மறைக்குது.

கொஞ்சம் பொறுத்துக்கணும். பகவானே துயில் களைய வில்லை. அதற்குத்தான் பஜனை .
அவர்கள் முடிக்கும்போது தான் எல்லோரும் சாப்பிட முடியும்.

அவர்களுக்கு பசிக்குமா தெரியல்லையே...

வரும்போதே செமத்தியா ஒரு புடி புடிச்சுட்டு வந்திருப்பாகளோ ?
பஜனை லே எழுந்திருக்கிறா மாதிரியே தெரியலையே...

அப்ப அதுக்குள்ளே மேடம் ஷைலஜா உரை என்ன என்று பார்த்துவிட்டு வருவோம்.
+Shylaja Narayan
அப்பாடி !!  ஒரு தினுசா கடைசி யா ஹரே கிருஷ்ணா சொல்லிட்டார்.

என்ன நைவேத்யம்.

பாநி பூரி. குலோப் ஜாமுன்.
குலோப் ஜானிலே நெய் நிறையா இருக்குமோ ?
நெய் அப்படின்னா ghee யா ?
ஆமாம்.
இருங்க. +Geetha Sambasivam மேடத்தை கேட்டு சொல்றேன்.



என்ன சுவை ! என்ன சுவை !!
கண்ணபிரானின் கருணையும் அதே சுவை.
சுவைத்தவர்கள் சொல்லமுடியாது.
சொல்ல நா வன்மை படைத்தவர்கள் சுவைக்க இயலாது.
கண்டவர் விண்டிலர். விண்டவர் கண்டிலர்.
******************************************************************************************************************************************************************************************************************************************