JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 23, 2013

எருமைகள் புறப்பட்டு விட்டன


 ஆஹா இன்னிக்கு மயில் கோலம் !! என்ன அழகு...
இதையே இப்படி சொன்னா இங்கு போனா பிரமிச்சு போயி, அங்கேயே இருந்து விடுவீர்கள். 


இங்கே பாருங்க.. பெருமாள் பவனி வரார்.




பின்னே வரும் வேத விற்பன்னர் யாவரும் திருப்பாவை எட்டாம் பாசுரத்தை பாடி வருகின்றனர்.
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு ..எனத் துவங்குகிறது எட்டாம் திருப்பாவை
எருமைகள் புறப்பட்டு விட்டனவாமே.

வாங்கோ வாங்கோ.  இன்னிக்கு ஒரு உபன்யாச கர்த்தா இந்த திருப்பாவையின் மகிமையை எடுத்து சொல்லுகிறார். அதை கேட்டு பயன் பெறுங்கள்.  முக்கியமான அஞ்சு பேர் மட்டும் இன்று ஊர்வலம் போயிட்டு வரலாம் 
என்று வந்தவர்களிடம் நாங்கள் பணிக்கிறோம். இல்லை பணிந்து சொல்கிறோம்.





சிலர் கவனம் சற்று நேரத்திற்குப் பின்னே சிதறுகிறது.
என்ன என்று பார்த்தால் அங்கே நெய் உப்புமா கம கமக்கிறது.
ஆஹா இதுவல்லவா இன்றைய பிரசாதம் !!

சித்ரா அம்மாஸ் கிச்சன் லேந்து தயார் செய்து கொண்டு வந்து இருக்கிரார்கள். 



என்ன விசேஷம் இதில் இப்படி ஒரு அபார வாசனை  என்று நைசா வந்தவர்களிடம் கேட்டேன்.
வழக்கமா சீசேம் ஆயில்,இன்று ப்யூர் நெய்யில் செய்து இருக்கிறோம். என்றார்கள்.

நான் கேடரிங் பீபிள் கிட்டே பேசுவதை கவனித்து விட்ட பார்யாள்,

அது என்ன சோறு தான் சொர்க்கம் என்று அலைகிறீர்கள் என்று அலுத்துக்கொண்டாள் பார்யாள்.

அன்னம் ச பிரம்மா என்று போட்டு இருக்கில்லையா என்றேன்.

அந்த அபார கருணா மூர்த்தியான அநந்த பத்மநாபனிடம் மனசை செலுத்தி
போகிற வழிக்கு புண்யத்தை தேடி  தெரிந்து கொள்ளலாம் இல்லையா , இன்னும் ஒரு ஹாப் ஆன் அவருக்கு உபன்யாசத்தை கேளுங்கள்.என்றாள் இவள்.

மனசோ, உபன்யாசம் முடியறதுக்கு முன்னாடி உப்புமா முடிஞ்சுடும் போல இருக்கே என்கிறது

 இன்னர் இண்டூயிஷன் இஸ் த ஒன் ஒன் மஸ்ட் லுக் இண்டு வென் எவரிதிங் கோஸ் அஸ்ட்றே ..மெனேஜ்மெண்ட் ப்ரின்சிபிலும் ஞாபகத்துக்கு வர்றது.

உபன்யாச கர்த்தா மனசை பெருமாளிடம் எப்படி செலுத்தி அதை நிலைத்து இருக்கச் செய்யவேண்டும் எனச் சொல்கிறார்.

சரிதான். அதற்குள் உப்புமா சூடு ஆறிடும்போல இருக்கே...!!!

ஆறு மனமே ஆறு.


*****************************************************************************
For every decision, it is essential that you are in touch with that inner source of intuition, then you will seldom go wrong. +Sri Sri Ravi Shankar