JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

செவ்வாய், டிசம்பர் 17, 2013

வையத்து வாழ்வீர்காள் !! நாமும் நம் பாவைக்கு..

இன்றைய கோலம் திருமதி. வாணி முத்துகிருஷ்ணன் அவர்கள் வலைப்பதிவிலிருந்து .

.இதோ !! வைகறைப் பொழுதிலே பரந்தாமனைப் பாடிட பஜனை கோஷ்டி தன் பயணத்தைத் துவங்கிவிட்டது.
  வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு ..


அது சரி, என்ன இது சுப்பு தாத்தா குரல் நடுக்கமாக இருக்கிறது ?

ஒண்ணுமில்லை. மீனாச்சி பாட்டி

இந்த வயசான காலத்துலே கொட்டற பனிலே இதுமாதிரி எல்லாம் தேவையா ?
நாளைக்கு ஜலதோஷம் கபம் அப்படின்னு வந்தா அந்த இருமல் வந்தா உங்களை இரண்டு மாசத்து விடாதே  

அப்படின்னு ஊர்வலம் போகும்போது ஒரு வார்த்தை சொல்லி இருப்பார்கள்.

அதனாலே என்ன ?

திரும்பி வந்ததும் சூடாக ஒரு காபி சாப்ப்பிடால் எல்லாம் சரியாயிடும்.

அது சரி, இன்னிக்கு பஜனை முடிஞ்ச உடனே என்ன நைவேத்தியம்.? என்ன வினியோகம்.

கௌதமன் சார் வீட்டிலேந்து செய்து கொண்டு வந்த ரவா பொங்கல் இன்னிக்கு .

ஆஹா... என்ன மணம் என்ன மணம் !!


மணம் இருக்கட்டும் ஸ்வாமி !! இத்தனை பேருக்கு செஞ்சு கொண்டு வந்து தரனும் அப்படின்னா ஒரு மனசு வேண்டும் இல்லையா.

அது அவருக்கு அந்த பரந்தாமன் தந்து இருக்கார்.

+Gowthaman K G க்கு ஜே . சார் ரொம்ப தாங்க்ஸ்.

இது எப்படி பண்ணறது ?

அதெல்லாம் தெரிஞ்சுக்க இங்கே போங்க.

காபி வந்தாச்சா?

ஆஹா...


பிரமாதம்.
ஆமாம். நாளைக்கும் இது மாதிரி பொங்கல் காபி ??

முதல்லே சரியான நேரத்துக்கு திருப்பாவை பஜனைக்கு வரணும். அப்பத்தான் வினியோகம்.