JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

திங்கள், டிசம்பர் 16, 2013

கண்ணா கண்ணா ஓடி வா

IDUKKU PULLI KOLAM 
இந்த கோலம் கமலாஸ் கார்னர் லேந்து கொண்டு வந்தேன்.
ரொம்ப தாங்க்ஸ்.
http://kolangal.kamalascorner.com/2010/01/kolam-no265.html
idukku pulli kolam
Courtesy: kolangal: kolam 265
மாதங்களில் நான்
மார்கழி  என்றான் கண்ணன்.  அப்படி என்ன அந்த மார்கழிக்கு விசேஷம் என்று ஆன்மீக பதிவாளர்களில் முதன்மையானவரும் அந்த ஆண்டாளே இவர்தானோ என்று அதிசயிக்கச்செய்பவருமான திருமதி ராஜராஜேஸ்வரி அவர்கள் பதிவுக்குச் சென்று 

அந்த ரங்கனிடம் ஐக்கியமான ஆண்டாள் வைர மூக்குத்தி சேவையை தரிசித்து விட்டு ,

இங்கே திரும்பவும் வருவோம்.

அந்த கண்ணனை ஓடி வா என்று அழைப்போம்.

கண்ணா கண்ணா ஓடி வா சின்ன கண்ணா ஓடி வா.

குருவாயூர் கண்ணன்
புல்லாங்குழலை ஊதி வா.



அந்த காலத்தில் ஐம்பது வருஷங்களுக்கு முன்பாக திருச்சி ஆண்டார் வீதியிலே விடியற்காலையிலே வைகரைப்பொழுதிலே திருப்பாவை, திருவெம்பாவை பதிகங்களை பாடிக்கொண்டே ஒரு கோஷ்டி செல்லும்.

அந்த கோஷ்டியுடன் நானும் பல முறை சென்று இருக்கிறேன். பெரிய பக்தி பெருவெள்ளம் என்று ஒன்றும் இல்லை.

அவர்கள் பஜனை முடிவிலே நான்கு வீதிகளும் சுற்றி முடிந்தபின்னே ஒரு தொன்னையில் வெண் பொங்கல் தருவார்கள்.

இன்று சுப்பு தாத்தா மார்கழி திங்கள் என்று முதல் பாடலை பாடுகிறார்.

தமிழ் ஹிந்துவுக்கு ஒரு தாங்க்ஸ் சொல்லவேண்டும். கண்ணதாசன் அவர்களின் உரையை இன்றைய நாளிதழில் இட்டு இருக்கிரார்கள்.




இன்று வெண் பொங்கல் வடை தனது கிருஹத்தில் செய்து கொண்டு வருவதாக நமக்கு செய்தி அனுப்பி இருக்கும்

+Balu Sriram

அவர்களுக்கு நன்றி சொல்வோம்.

அது சுகம் சுகம். அவர்களே தினமும் கொண்டு வந்து தரவேண்டும் என எதிர்பார்ப்பது தவறாகுமே என்று மனதில் தோன்றியதால், நாளை முதல் நாமே பொங்கலை தயார் செய்யவேண்டும் என்பதால், இந்த இடத்துக் சென்று எப்படி பொங்கலை தயாரிப்பது என்று ஒரு கிராஷ் கோர்ஸ் செய்யவும்.

பொங்கல் ரெடி.
சாப்பிட துவங்குவோமா...
நீங்கள் அதை சாப்பிட்டு முடிக்குமுன்னே காபி தயாராகி விடும்.
இன்று பால் கொஞ்சம் லேட்டாகி வருகிறது போல இருக்கிறது.
ஆத்துக்காரி எழுந்து கொள்வதும் லேட் ஆகிவிட்டது.

காபி வருவதற்குள்
நமது தஞ்சை நண்பர் திரு துரை செல்வராஜ் அவர்கள், மார்கழி மாதச் சிறப்பு என்ன என்பதை அழகென எழுதியிருக்கிறார்கள்.

அதை சத்தமாக படிப்போம்.

காபி வந்துவிட்டதே.

சுவையான காபி. அதை சூடாக சாப்பிடுங்கள்.

வந்த அத்தனை பேர்களுக்கும் தாங்க்ஸ்.