JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

புதன், மார்ச் 06, 2013

Thirumangai Alwar


A note from the blog of SRI .
on Lord Parimala Ranganatha Perumal of INDHALUR , NEAR MAYILADUTHRAI.

THIS MORNING, I HAD THE FORTUNE OF DHARSAN OF PARIMALA RANGANATHAR AND A NICE DESCRIPTION OF THE VILLAGE INDHALUR NEAR MAYILADUTHURAI . I SHOULD THANK MRS.THULASI GOPAL FOR THE HEARTENING DESCRIPTION OF THE TEMPLE. SHE HAD CITED THE BLOG OF THIRU SRI TO MORE UNDERSTAND THE TEMPLE AS WELL AS THE PASURAMS WRITTEN BY THIRUMANGAI ALWAR.

I COULD NOT DO BUT WITHOUT SINGING THIS PASURAMS IN MY OWN WAY. I AM NOT SURE WHETHER I SING THESE PASURAMS OF THIRUMANGAI ALWAR AS THEY USED BY SUNG BY ADIYARKAL .


Courtesy: SRI

திருமங்கை மன்னனும், பரிமள ரங்கனும்!

நமக்குத் தெரியும் திருமங்கை ஆழ்வாரை! 108 திருத்தலங்களில் 86 தலங்களை நேரில் கண்டு பாடியவர். இங்கும் பெருமாளைத் தரிசித்துப் பாட வருகிறார். கோவிலுக்குள் அவர் நுழையும்போது வழிபாடுகள் நிறைவுற்றுக் கதவு அடைக்கப்படுகிறது! அதிர்கிறார் ஆழ்வார். ”வசை வாழ்த்துப்” பாடல்களை இயற்றுகிறார் இறைவனை நோக்கி! வைணவ மரபில் ஆழ்வாருக்கும், ஆண்டவனுக்கும் இடையிலான உரையாடலாகப் பின்வரும் பாடல்களைக் கருதுகிறார்கள்!

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு இங்கு இழுக்காய்த்து; அடியோர்க்கு
தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு,
காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்!
வாசி வல்லீர் இந்தளூரீரே! - வாழ்ந்தே போம் நீரே!

நமக்கு வேண்டிய ஒருவன் நமக்குரிய பொருளைத் தன்னகத்தே கொண்டு தரமறுத்தால் நாம் என்ன சொல்வோம்? ”பரவாயில்லை! நீரே வைத்துக் கொண்டு நலமாய் வாழுங்கள்” என்போம் இல்லையா? அதுவே இப்பாடலின் சாரம்! வாழ்ந்தே போம் என்பது, உமது அழகை நீரே வைத்துக் கொள்ளவும் என்ற பொருளில்!

ஆழ்வார், ”நான் உனது அடிமை என்று அறிந்தபின்னும் காட்சி கொடுக்காமல் தாழிட்டுக் கொள்வது உமக்குப் பழியைத் தேடித் தரும் ” என்று எச்சரிக்கிறார். யாரை? பெருமாளை! பரிமள ரங்கன், “எமக்குப் பழிவரும் என நீர் ஏன் அஞ்சுகிறீர்? அதை யாம் பார்த்துக் கொள்வோம்” எனப் பதிலிறுக்கிறார். திருமங்கை ஆழ்வாரின் அழகுத்தமிழைப் பரிமளன் பருக விரும்பியதே விவாதத்தின் நோக்கம்!

மற்றொரு அற்புதமான பாடல்!

முன்னை வண்ணம் பாலின் வண்ணம், முழுதும் நிலைநின்ற,
பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம், வண்ணம் எண்ணுங்கால்
பொன்னின் வண்ணம், மணியின் வண்ணம் புரையும் திருமேனி,
இன்ன வண்ணம் என்று காட்டீர், இந்தளூரீரே!

இறுதியில் ஆழ்வார் அரங்கனைத் தரிசித்துவிட்டே சென்றார்!

YOU CAN LISTEN TO THE SONG HERE ALSO .