JAGADHGURU

JAGADHGURU
க்ஷேமமா இருங்கோ

வியாழன், ஜூன் 14, 2012

தாமரைப் பூ


அற்புதமான கண்ணன் கவிதை ஒன்றை செதுக்கி இருக்கிறார் திரு வசந்த குமார் அவர்கள். அதை நீங்கள் இங்கே காணலாம்

தாமரைப் பூந்தாளெடுத்து
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...
தாமரைப் பூந்தாளெடுத்து
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ...
அவன் பூவிதழில் புன்னகைத்து
புனைவிழியில் புல்லரித்து
புதுமலரில் வண்டெனவே சேராயோ...
புதுமலரில் வண்டெனவே சேராயோ...

கண்ணழகைக் காண்பதற்குக்
காரிருளில் வெள்ளைநிலா
பிள்ளைமுகம் தேடி ஓடி வாராதோ...
வண்ணமயில் தோகை யொன்றை
கண்ணன் முகம் தாங்கியதை
எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...
எண்ணமெல்லாம் ஏந்திக் கொண்டு போகாதோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ.


ராதை மனம் கண்டு அந்த
கோதையுடன் மோகனத்தின்
பாதையிலே பாடிவந்தான் கேளாயோ...
தளிர் ஊடி வரும் காற்றின்
குளிர் ஊதலிலே நாதம்தரும்
குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...
குழலெனவே கிறங்குகின்றாள் பாராயோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
தாவிவரும் தங்கரதம்
மேனியிலே வாங்கிக்கொள்ள வாராயோ.

முன்னம் வந்த ராத்திரியில்
மூடவந்த முகத்திரையில்
முத்தமழை சிந்துகின்றான் வாங்காயோ...
புலர் வெள்ளி வரும் வேளை வரை
புல்நுனி நீர் தீரும் வரை
புதல்வனைநீ மடியினிலே தாங்காயோ...
(தாமரைப் பூந்தாளெடுத்து)
Posted by இரா. வசந்த குமார்

கே.ஆர். எஸ். சொன்னது சரிதான்.
கொஞ்சம் ஏ தான். இருந்தாலும் சந்தத்திலும் நடையிலும் உணர்விலும் பின்னிபின்னி வாங்குகிறது. கேட்க வேண்டும் என்றால்
இங்கே